×

கோவையில் முதல்வருடன் இஸ்லாமியர்கள் சந்திப்பு: சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

கோவை: கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இஸ்லாமிய அமைப்புகள் சந்தித்து பேசினர். சிஏஏ, என்ஆர்சி, மற்றும் என்பிஆர் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 60 நாட்களாக பல்வேறு இடங்களில் நடைபெறும் போராட்டத்தில் அவ்வப்போது வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக டெல்லியில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடிய சம்பவம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இஸ்லாமிய அமைப்புகள் சந்தித்து பேசினர்.

சிஏஏ, என்ஆர்சி, மற்றும் என்பிஆர் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட அரசுகள் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. அதுபோன்ற ஒரு நிலையை தமிழக அரசு அந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், இஸ்லாமியர்களுக்கு புதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை இஸ்லாமிய கூட்டமைப்பை சார்ந்தவர்கள் முதல்வர் பழனிசாமியிடம் வழங்கியுள்ளனர்.


Tags : NPR Islamists ,NRC ,CM ,Goa ,CAA , Coimbatore, CM, Islamists, meeting
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!