×

சீருடை பணியாளர் தேர்வு நடைமுறைக்கு தனி நீதிபதி விதித்த தடையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சீருடை பணியாளர் தேர்வு நடைமுறைக்கு தனி நீதிபதி விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குறிப்பிட்ட ஒரு மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் அதிகளவில் தேர்வானதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

Tags : Madras High Court , Uniformed employee
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு