ஈரோடு: ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் மாயம் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று பள்ளிக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பெற்றோரின் புகாரை அடுத்து காணாமல் போன 4 மாணவர்களை பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.