×

கத்தி முனையில் மிரட்டி 3 பேரிடம் வழிப்பறி: ஒருவர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி, புதுநகர், 5வது தெருவை சேர்ந்தவர் முகமது அலி (24). இவர், நேற்று முன்தினம் இரவு தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, நண்பர்கள் 2 பேருடன் பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வியாசர்பாடி பேசின் பாலம் அருகே வந்தபோது, பைக்கில் வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி முகமது அலி மற்றும் அவரது நண்பர்கள் வைத்திருந்த ₹18 ஆயிரம், 2 செல்போன்களை பறித்து கொண்டு தப்பிஓட முயன்றனர். அப்போது, முகமது அலி கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, கொள்ளையர்களை விரட்டினர். அதில், ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பினார். இதையடுத்து பிடிபட்ட வாலிபருக்கு தர்மஅடி கொடுத்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், சென்னை பூக்கடை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (22) என்பது தெரியவந்தது.  அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பிய மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.


Tags : knife attack , Women's Day, Metro Railway Stations, Free Medical Camp
× RELATED ஜப்பான் நாட்டின் நோபோரிடோ பகுதியில்...