×

தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது: 67 சவரன் பறிமுதல்

வேளச்சேரி: சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வருபவர் பாரதி. இவரது தந்தை, தாய் பெசன்ட் நகர், ஐந்தாவது அவென்யூ சாலையில் வசித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி இவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில், விருதுநகரை சேர்ந்த வன்னிக்கருப்பு (27), மதுரையை சேர்ந்த சுரேந்திரன் (24) ஆகிய 2 கொள்ளையர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் சென்னை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 67 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள இவரது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.

* கோயம்பேடு, நெற்குன்றம் பகுதிகளில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த வளசரவாக்கத்தை சேர்ந்த சூரியா (20), நெற்குன்றத்தை சேர்ந்த திலீப்குமார் (19) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.„ திருவொற்றியூர் அப்பர் நகர் பகுதியில் சுண்டக்கஞ்சி விற்ற கல்பனா (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். „கந்தன்சாவடி காளியம்மன் கோயில் தெருவில் கஞ்சா விற்பனை செய்த புதுப்பாக்கம் கலைஞர் நகர் 6வது தெருவைச் சேர்ந்த செந்தில் (39) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். புது பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் சரண் என்பவரின் ஜெராக்ஸ் கடையில் வைத்திருந்த விலை மதிப்புள்ள செல்போன் திருடுபோனது.

„புதுச்சேரி அடுத்த கோட்டுச்சேரி தாலுகா முப்புரம் கிராமத்தை சேர்ந்த ராஜா (30), செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு, திருவள்ளுவர் தெருவில் தங்கி, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், மனைவியுடன் தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில் துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரின் வீட்டை சூறையாடிய அதே பகுதியை சேர்ந்த செல்வி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். „சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ஷேக் தாவூத் (20), நேற்று முன்தினம் இரவு பெசன்ட்நகர் பெசன்ட் அவென்யூ சாலை வழியாக பைக்கில் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்தார்.„ பொழிச்சலூர் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட திருநீர்மலை பகுதியை சேர்ந்த சதீஷ் (28) மற்றும் பம்மலை சேர்ந்த குணாநிதி (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Tags : robbers ,robbery , Serial theft, 2 robberies, arrest, 67 shaving, seizure
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...