×

விஏஓ தேர்வு முறைகேட்டில் கைதான ஜெயக்குமார், ஓம்காந்தனுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. வி.ஏ.ஓ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், ஓம்காந்தனுக்கு 5 நாள் போலீஸ் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பான ஒவ்வொரு முறைகேட்டிலும் ஜெயக்குமார், ஓம்காந்தன் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் அனைத்து முறைகேடும் செய்தது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து ஒவ்வொரு தேர்வு முறைகேடு தொடர்பாகவும் அவர்கள் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காவலில் எடுத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்டமாக குரூப்-4 விவகாரத்தில் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் பின்பு குரூப்-2 ஏ விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இந்த விவகாரத்திலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அடுத்தகட்டமாக விஏஓ தேர்விலும் இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. ஏனென்றால் இந்த விஏஓ தேர்வு முறைகேடு தான் முதற்கட்டமாக நடந்ததாகவும், அடுத்தடுத்து இந்த தேர்வுகளில் எல்லாம் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வில் 8 தேர்வர்களை தேர்ச்சி பெற வைத்தது தெரிய வந்தது.

இன்னும் இந்த விஏஓ தேர்வில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது?. எந்தெந்த மையங்களில் முறைகேடானது நடைபெற்றது?. என்பது குறித்து இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகிய இருவரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் 5 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து இவர்களை சம்மந்தப்பட்ட மையத்திற்கு எல்லாம் அழைத்து சென்று எவ்வாறு இந்த முறைகேட்டில் ஈடுபட்டனர் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Tags : Omkandan ,Jayakumar ,VAO , VAO Exam Scandal, Jayakumar, Om Gandhan, Police
× RELATED ஜெயக்குமார் மரணத்தில் நிறைய...