டெல்லி: ஒரு போதும் பின்வாங்க போவதில்லை, தூக்கு தண்டனை பெற்று கொடுத்தே தீருவேன் என நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கே அரசியலமைப்பு ஆதரவு தருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை தூக்கிலிட நீதிமன்றம் தனது சொந்த உத்தரவை நிறைவேற்ற ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மரணதண்டனை மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பது எங்கள் அமைப்பின் தோல்வியைக் காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.