×

முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீதான வழக்குக்கு தடை விதிக்க மறுப்பு

சென்னை: தமிழக முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. சீமானின் கருத்து அரசுக்கும், முதல்வரின் பெயருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக முதல்வர் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி சீமான் ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். செப்டம்பர் 14ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சீமான் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்ததாக செய்தி வெளியானது.

Tags : Seaman ,CM Seeman , Seeman
× RELATED சொல்லிட்டாங்க…