×

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத ஏ.சி!

நன்றி குங்குமம் முத்தாரம்

சமீபத்தில் ‘சவுண்ட் எனர்ஜி’ நிறுவனம் சூரிய வெப்பத்தில் இயங்கும் ‘தியாக்-25’ என்ற ஏ.சியை உருவாக்கியுள்ளது. பார்ப்பதற்கு பேண்டு வாத்தியக் கருவி போலத் தெரியும் இந்த ஏ.சி.யில் மின்சாரம், குளிர் சாதனப் பெட்டி இல்லாமல் வெப்பத்தைக் குளிரவைக்கும் அகௌஸ்டிக் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. 25 கிலோவாட் திறன்கொண்ட ‘தியாக்-25’ ஏ.சியால் -25 டிகிரி சென்டிகிரேடு குளிர்ச்சியை உருவாக்க முடியும். நாம் பயன்படுத்தும் ஏ.சி-க்களில் உள்ள வேதி திரவம் மற்றும் வாயு இதில் இல்லை. இதன் பாகங்கள் அசையாது.

இதில் ‘ஆர்கான்’ என்ற சுற்றுச்சூழலுக்குக் கேடுதராத வாயுவை மட்டுமே பயன்படுத்துவதாக நிறுவனத்தினர் சொல்கின்றனர். இப்போது இந்த ஏ.சி-யை பெரிய ஆலைகள், கட்டடங்களுக்கு மட்டுமே பொருத்த முடியும். ‘‘விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சியை வடிவமைப்போம்...’’ என்கிறது சவுண்ட் எனர்ஜி.

Tags : AC , Recently, Sound Energy Telephone Company has created the AC-25-model AC, which is solar powered.
× RELATED வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை...