டெல்லி: டெல்லி கலவரம் திட்டமிட்ட இனப்படுகொலை என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார். துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அமித்ஷா பேரணியில் தொண்டர்கள் முழக்கமிட்டது சட்டவிரோதம் என மம்தா கருத்து தெரிவித்தார். துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று முழக்கமிட்ட பாஜக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.