சென்னை: மக்கள் நல பணியாளர்கள் பணி நீக்கம் தொடர்பான வழக்கை மார்ச் 3ஆம் வாரம் விசாரிக்கிறது உச்சர்நீதிமன்றம். தமிழக அரசின் மேல்முறையீட்டை விரைவாக விசாரிக்க கோரிய தன்ராஜ் என்பவரின் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம். மக்கள் நல பணியாளர்கள் பணி நீக்கத்துக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. தமிழகத்தில் 13,000 மக்கள் நல பணியாளர்கள் 2011ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.