கோவை: கோவையில் திருமணமான 16 வயது சிறுமியை கடத்தியதாக ரஞ்சித்குமார் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயது சிறுமியை திருமணம் செய்த முகமது நிஷாரும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் முகமது நிஷாரின் பெற்றோர் அப்துல் சலாம், பர்சானா ஆகியோர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.