×

தேன்கனிக்கோட்டை அருகே எருதாட்டம்: காளை இழுத்து சென்றதில் தொழிலாளி பலி

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை மல்லிகார்ஜூனா துர்க்கம் மலைக்கோயில் தேர்திருவிழாவையொட்டி, நேற்று எருதாட்டம் நடந்தது. இதனை காண சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது அலங்கரிக்கப்பட்ட காளைகள், ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. எருதாட்டத்தை வேடிக்கை பார்க்க கேரட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முனியப்பா(எ) சின்னபையன்(38) என்பவரும் வந்திருந்தார்.

அப்போது, ஒரு காளையின் கயிற்றில், சின்னபையனின் கால் மாட்டிக் கொண்டது. இதனால், மாடு வேகமாக ஓடிய போது, சின்னபையனும் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். மாடுபிடி வீரர்கள் சிலர், கயிற்றை இழுத்து பிடித்து அவரை காப்பாற்றினர். ஆனால், காளை இழுத்துச் சென்றதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதனிடையே, எருதாட்டத்தின் போது 2 காளைகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் படுகாயமடைந்த 2 காளைகளும் உயிரிழந்தன.

Tags : Denkanikottai ,bullock accident ,laborer , Denkanikottai, oxen, bull, dragged, laborer, killed
× RELATED கிராம கூட்டத்தில் தொழிலாளி கொலை: முன்னாள் நாட்டாமை கைது