கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் நேற்று கே.பி.முனுசாமி அளித்த பேட்டி: சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர், கட்சியில் பெரிய அளவில் மாற்றம் வரும் என்று சொல்வது, அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். சட்டரீதியாக அவர் வெளியே வருவார்களா என்று சொல்வது சந்தேகம் தான். காரணம் சிறைச்சாலையில் அவர் நன்னடத்தையோடு செயல்படவில்லை என்று தெரியவந்துள்ளது. தவறுகள் செய்துள்ள அவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அவர் எப்போது வந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே, அவர்கள் எல்லாவிதமான முயற்சியும் செய்து பார்த்தார்கள். ஆனால் தோல்வியைத் தான் தழுவினார்கள். இனி இந்த கட்சியில் அவருக்கு எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது. கடை சாத்தப்பட்டு விட்டது. வந்தால் அவர்கள் வெளியே நின்று கும்பிட்டு விட்டு செல்ல வேண்டியது தான். இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.