×

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப்பணி கூடுதலாக குழி தோண்ட முடிவு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி கடந்த மாதம் 19ம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் தொடங்கியது. 5ம் கட்ட அகழாய்வில் சுருள் வடிவ சுடுமண் குழாயும், அதன் கீழே பீப்பாய் வடிவிலான குழாய்களும் கண்டறியப்பட்டன. ஆறாம் கட்ட அகழாய்வில் இந்த குழாய்களின் தொடர்ச்சியை கண்டறிய முடியும் என தொல்லியல்துறையினர் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதன்படி, இப்பகுதியைச் சேர்ந்த நீதியம்மாள் என்பவரது நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டன.

12 நாள் நடந்த அகழாய்வில் கருப்பு சிவப்பு நிறத்திலான இரு பானைகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதில் ஒரு பானை 5ம் கட்ட அகழாய்வின் போது கருப்பையாவின் நிலத்தில் கிடைத்த வட்டப்பானையை ஒத்திருந்தது. மற்றொரு பானை சிறிய வடிவில் உள்ளது. தற்போது பானையின் வாய்ப்பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. கூடுதலாக அகழாய்வு செய்யும் போதுதான் முழுவடிவிலான பானையும் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது சுடுமண் குழாயின் தொடர்ச்சியை கண்டறிய அது கிடைத்த இடத்தின் வடக்கு பகுதியில் கூடுதல் குழி தோண்ட தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. இன்று முதல் அந்த இடத்தில் அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளன.

Tags : floor , Accordingly, stage 6, excavation, addition, excavation, results
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!