×

முரளிதர் ராவ் பேச்சு போராடினாலும் சிஏஏ போகாது

நாகர்கோவில்: இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எனவே, யார் போராடினாலும் சிஏஏ நாட்டை விட்டு போகாது என்று பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் பேசினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அந்த சட்டத்தை ஆதரித்தும் குமரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று மாலை பேரணி மற்றும் விளக்க கூட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தொடங்கி கலெக்டர் அலுவலகம் முன்பு பேரணி முடிந்தது.

தொடர்ந்து பா.ஜ தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் பேசுகையில், ‘‘உச்சியில்  காஷ்மீரும், பாதத்தில் கன்னியாகுமரியும் இருக்கிறது. யார் போராடினாலும் சிஏஏ நாட்டை விட்டு போகாது.  பாகிஸ்தான், ஈரான், சிரியா,  துருக்கியில் அதிக முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எனவே, இன்றும் நாளையும் எப்போதும் குடியுரிமை சட்டத்தால்  துன்பம் இல்லை என சவால் விடுகிறோம்’’ என்றார். கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்

Tags : talks ,Muralidhar Rao ,CAA , Muralidhar Rao talks, struggles , CAA does not
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்