×

குடும்ப தகராறு எதிரொலி நடிகை தூக்குபோட்டு தற்கொலை

சென்னை: சினிமாவில் நடித்து வந்த துணை நடிகை குடும்ப பிரச்னை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் பவன். இவரது மனைவி பத்மஜா (23). இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். பத்மஜா சினிமாவில் சிறு, சிறு வேடங்களில் துணை நடிகையாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிப்பது மற்றும் கணவரின் வேலை குறித்து அடிக்கடி குடும்பத்துக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கணவர் பவன் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு சொந்த ஊரான ஆந்திராவிற்கு சென்றுள்ளார்.

இதனால் பத்மஜா மட்டும் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை பத்மஜாவின் வீடு வெகுநேரமாக திறக்காமல் இருந்தது. இதை பார்த்த வீட்டு உரிமையாளர் கதவை தட்டி பார்த்தபோது உள்ளே பத்மஜா தூக்கில் பிணமாக தொங்கிய படி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பத்மஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது கணவர் பவனுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வந்த பிறகே துைண நடிகையின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.


Tags : family dispute ,suicide , Family dispute, echo, actress, executioner, suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை