சிங்ரவுலி: மத்தியப் பிரதேச மாநிலம், அம்ரோலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கி சென்றது. கன்ஹாரி கிராமம் அருகே இது வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே காலியாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியது. இதில், ஒரு ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன.
இதில் 3 பேர் உயிரிழந்தனர். இவர்கள் யார் என அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் 2 சரக்கு ரயில்களின் ஓட்டுனர்கள், ரயில்வே ஊழியராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.