×

தீயிலிருந்து நாயை காப்பாற்ற முயன்ற ராணுவ அதிகாரி பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீ விபத்தில் இருந்து நாயை காப்பாற்ற முயன்ற ராணுவ அதிகாரி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க்கில் ராணுவ அதிகாரியின் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயில் இருந்து மனைவியையும், வீட்டில் வளர்த்து வந்த நாய்களில் ஒன்றையும் ராணுவ அதிகாரி மேஜர் அன்கிட் புத்ராஜா காப்பாற்றினார். தீயில் சிக்கி  தவித்த தனது மற்றொரு நாயை அவர் காப்பற்ற முயற்சித்தார். இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. 90 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூலமாக தீ கட்டுப்படுத்தப்பட்டது.

Tags : Army officer , An army officer, trying , save a dog , fire, kills
× RELATED மும்பை தாராவியில் இருந்து ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலு தேர்வு..!!