×

வழிப்பறி ஆசாமிகள் 2 பேர் பிடிபட்டனர்

பூந்தமல்லி: மதுரவாயலை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). வானகரம் சர்வீஸ் சாலை அருகே  வாகன பார்க்கிங் நடத்தி வருகிறார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், இரவில் சர்வீஸ் சாலை வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், முகவரி கேட்பதுபோல் நடித்து, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை  எடுத்து, ஆறுமுகத்தின் கழுத்தில் வைத்து அவரிடமிருந்த ரூ.1000 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

உடனே, ஆறுமுகம் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்த லாரி டிரைவர்கள் விரட்டி சென்று அந்த இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர்  மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  போலீசார் விசாரணையில், பிடிபட்டவர்கள் ஓட்டேரியை சேர்ந்த முருகன் (38) மற்றும் தண்டையார்பேட்டையை சேர்ந்த அப்துல் கறீம் (36) என்பது தெரியவந்தது.  அவர்களிடமிருந்து பணம் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவர் மீதும்  பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Liturgy Asami 2 , Liturgy, Asami,caught
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...