×

சிறுமியை காரில் கடத்தி பலாத்காரம் 3 வாலிபர்கள் போக்சோவில் கைது

வேளச்சேரி: சிறுமியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ஒருவர்  தனது வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமியை காணவில்லை என அடையாறு காவல் நிலையத்தில் கடந்த மாதம் 8ம் தேதி புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த சிறுமியை காணவில்லை என விளம்பரம் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்ற அந்த சிறுமி பாலவாக்கத்தில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் வேலை செய்வதை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர், அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு சென்ற போலீசார்   சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, நீலாங்கரை அறிஞர் அண்ணா நகர் பாண்டியன் சாலை 3வது தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவர், ஆசை வார்த்தை கூறி தன்னை  ஒரு ஆட்டோவில் துரைப்பாக்கம் வரவழைத்தார். அதன்பின்,  அவரது  நண்பர் வினோத் (23) என்பவரின் காரில் ஏற்றினார். அதில், இன்னொரு நண்பரான மஹாராஜா (29) என்பவர் இருந்தார். இவர்கள், மூன்று பேரும் சேர்ந்து   காரில் என்னை அக்கரை கடற்கரைக்கு     அழைத்துச் சென்று, அங்கு  மூன்று பேரும் காரில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கேயே இறக்கி விட்டு சென்றனர். இதையடுத்து, பிழைக்க வழியில்லாததால், தள்ளுவண்டி கடையில் வேலை செய்து வந்தேன், என போலீசாரிடம் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, மூன்று வாலிபர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : youths ,Plaintiffs , Girl, abducted, car,Plaintiffs Arrested ,Bokso
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்