×

விமானத்தில் இயந்திர கோளாறு : 127 பேர் உயிர் தப்பினர்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து கவுகாத்தி புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. உடனடியாக கண்டறியப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 127 பேர் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து கவுகாத்தி செல்லும் விமானம் நேற்று காலை 4 மணிக்கு  புறப்பட வேண்டும். ஆனால் அந்த விமானம் மாலை 6 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த விமானம் 122 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உள்பட 127 பேருடன் மாலை 6 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு விமான ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது.

 அப்போது விமானத்தில் கோளாறு  ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானத்தை ஓடு பாதையில் நிறுத்திவிட்டு, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இழுவை வாகனம் மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வரப்பட்டது. விமான பொறியாளர்கள் விமானத்தில் ஏறி, பழுதை சரி செய்தனர். அதன் பின்பு சுமார் 1 மணி நேரம் கழித்து  இரவு 7.30 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. 


Tags : plane crash , Mechanical, disorder,flight, survived
× RELATED விமான விபத்தில் வாக்னர் கூலிப்படை தலைவன் பலியானதை உறுதி செய்தது ரஷ்யா