×

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர், 4வது தெருவை சேர்ந்த யமுனாதேவி (75), நேற்று முன்தினம் இரவு தனது பேத்தியுடன் வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த ஒரு வாலிபர் யமுனாதேவி கழுத்தில் கிடந்த 3 சவரன் சங்கிலி பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் வழிப்பறி செய்த நபரை தேடி வருகின்றனர்.



Tags : Chain ,grandfather , Chain, flush, grandfather
× RELATED நகை பறித்துவிட்டு மூதாட்டியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மர்ம நபர்