×

கொள்ளையடிப்பதை மறந்து போதையில் தூங்கிய கொள்ளையன் கைது

சென்னை: சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது வீட்டின் கீழ் பகுதியில் சொந்தமான மளிகை கடை மற்றும் அருகில் இருந்த மருந்து கடை உள்ளிட்ட மூன்று கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு 70 ஆயிரம் பணம் கடந்த வாரம் கொள்ளையடிக்கப்பட்டது. மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள  ஒரு கடையின் முன்பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒருவர் போதையில் தூங்கிக் கொண்டு இருப்பதாக  மதுரவாயல்  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். மேலும் அந்த மோட்டார் சைக்கிள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது, ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (என்ற) கிளி சதீஷ்(23), மதுரவாயலில் 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான். மீண்டும் அதே பகுதியில் கொள்ளை அடிக்க போதையில் வந்தபோது போதை தலைக்கேறியதும் கடையின் முன் பகுதியில் படுத்து தூங்கியதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 30  ஆயிரம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : sleeping robber , Drug, sleeping robber, arrested
× RELATED கஞ்சா வாங்கி தருவதாக ரூ50 ஆயிரம்...