×

செம்மரம் கடத்திய 10 தமிழர்கள் கைது

திருமலை: ஆந்திரா, கடப்பா மாவட்டம், ரயில்வே கோடூர் பாலபல்லி வனப்பகுதியில் வனச்சரகர் சீனிவாசலு தலைமையில் வனத்துறையினர் வேலமலதிகோணாவில் உள்ள  மொகிலிபெண்டபாடா என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் ரோந்து  சென்றனர்.
அப்போது செம்மரக்கட்டைகளுடன் வந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.  இதில் அவர்கள் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கரியன்,  காமராஜ், ராமசாமி மணிகண்டன், ஏழுமலை, திருமலை மோகன்ராஜ், பிச்சன் பழனி,  லட்சுமண ஆண்டி, அண்ணாமலை ராமன், நாராயணன்,  பொன்னுசாமி என்பது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறையினர் 10 பேரையும் கைது செய்து ₹10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags : Tamils ,kidnapping , 10 Tamils, arrested ,kidnapping
× RELATED தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது...