×

சென்னையில் பணிபுரியும் 90 தலைமை காவலர்களுக்கு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு

சென்னை: சென்னையில் பணிபுரியும் 90 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  சென்னை பெருநகர காவல் பணிப்பிரிவில் 1995ம் ஆண்டு காவல் துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் தற்போது வரை 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தலைமை காவலர்களாக 10 ஆண்டுகள் பணியாற்றி, 5  ஆண்டுகள் எந்தவித தண்டனைகளின்றி 90 தலைமை காவலர்கள் பணிபுரிந்துள்ளனர்.

இவர்கள், இன்று முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பணி நிலை உயர்வு பெறுகின்றனர். இவர்கள் மீது ஏதாவது தண்டனைகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட தலைமை காவலர்களுக்கு வழங்கப்பட்ட பணி நிலை  உயர்வு ரத்து செய்யப்படும். மேலும் அவர்கள் மீது தண்டனைகள் நிலுவையில் இருந்தால் அதன் விவரத்தை சென்னை பெருநகர காவல் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தலாம்.   பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள உத்தரவை சென்னை  தலைமையிட காவல் இணை ஆணையாளர் ஏ.ஜி.பாபு பிறப்பித்துள்ளார்.


Tags : SSI ,Headquarters , Working ,Chennai,SSI,90 Headquarters
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...