×

தெலங்கானா ஆளுநர் தமிழிசை உறவினர் தற்கொலை

பெ.நா.பாளையம்: தெலங்கானா கவர்னர் தமிழிசையின் உறவினர் கோவையில் தற்கொலை செய்து கொண்டார். கோவை அடுத்த துடியலூர், சுப்பிரமணியம்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜின் மகன் சண்முகநாதன் (25). திருமணமாகாதவர். தந்தை மற்றும் தாய் கோகிலாவுடன் சேர்ந்து காந்திபுரத்தில் மருந்து மொத்த விற்பனை நிலையம் நடத்தி வந்தார். தினசரி இரவு 9 மணிக்கு நிலையத்தை பூட்டிவிட்டு 3 பேரும் வீட்டிற்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சண்முகநாதன் மட்டும் வீடு திரும்பினார். பின்னர் பெற்றோர் இரவு வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் சண்முகநாதன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவர், தனக்கு கார் வாங்கி கொடுக்கும்படி பெற்றோரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மறுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம், என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட சண்முகநாதன், தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் மருமகள் திவ்யாவின் உடன் பிறந்த தம்பி ஆவார்.

Tags : governor ,Telangana ,Tamil Nadu , Telangana Governor, Tamil Nadu, Relative Suicide
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...