×

தலிபான் அமைப்புடன் அமைதி ஒப்பந்தம்: ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை 14 மாதங்களில் திரும்பப் பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சண்டையை நிறுத்த தலிபான் அமைப்புடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் வரும் 29-ம் தேதி அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், தலிபான் பயங்கரவாத அமைப்பும் அமைதி ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ஒரு வார காலம் சண்டை நிறுத்தம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆப்கானில் தலிபான் தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா மற்றும் தலிபான் அமைப்பினர் இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Taliban ,US ,Afghanistan ,troops , United States
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!