×

பெரியபாளையம் அருகே குடோனில் பதுக்கிய 15 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது; தப்பிய ஓடிய ஒருவருக்கு வலை

சென்னை: ஊத்துக்கோட்டை அருகே ஆரணி குடோனில்   15 லட்சம் மதிப்புள்ள  குட்கா, வேனுடன் பறிமுதல் செய்து, 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான குடோனில்  குட்கா பதுக்கி வைத்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது, உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் ஆரணி எஸ்.ஐ கிருஷ்ணராஜ்,  ஏட்டுகள் தியாகு, பரந்தாமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆரணி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நித்தியானந்தம் என்பவருக்கு சொந்தமான  குடோனில் இருந்து வெளியூர்களுக்கு எடுத்து செல்ல  மினி வேனில் குட்கா பொருட்களை ஏற்றிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது, குட்கா மூட்டைகளையும், வேனையும் போலீசார்  பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு  15 லட்சம் இருக்கும் என தெரிகிறது. மேலும், ஆரணியை சேர்ந்த நித்தியானந்தம் (32), அவருடன்  நாகராஜ் (22), துண்டி கிருஷ்ணா (23), சரண்குமார் (22), காந்தி என்ற ராஜ்குமார் (38) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  மேலும், ஐயப்பன் (42)  என்பவரை தேடி வருகிறார்கள்.



Tags : someone ,Gudon ,Periyapayam , Periyapalaiyam, drugs, 5 arrested
× RELATED சிறையில் இருப்பவரை ஜாமீனில்...