×

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு புகார் இளம்பெண், தாய், தாத்தாவை கொன்றவருக்கு தூக்கு தண்டனை: தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

தென்காசி: ஆலங்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை போலீசில் புகார் செய்ததால் இளம்பெண், அவரது தாய் மற்றும்  தாத்தாவை வெட்டி படுகொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை  விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர்  வடக்கு தெருவை சேர்ந்தவர் நயினார் மகன் முத்துராஜ் (36). இவர், கடந்த 12.2.2016 அன்று இதே ஊரைச் சேர்ந்த பேச்சித்தாய் மகள் மனநலம் பாதிக்கப்பட்ட கோமதிக்கு பாலியல்  தொல்லை கொடுத்துள்ளார்.  இதுகுறித்து பேச்சித்தாய், ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார்.  ஆலங்குளம் போலீசார், முத்துராஜிடம் விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி  வைத்தனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த முத்துராஜ், 16.2.2016ல் நெட்டூர் அய்யனார்தோப்பு கீழ்புறம் குளத்து வேலைக்கு சென்று விட்டு  திரும்பிக் கொண்டிருந்த பேச்சித்தாய் மற்றும் அதே பகுதியில் மாடு  மேய்த்துக் கொண்டிருந்த பேச்சித்தாயின்  மற்றொரு மகள் மாரியம்மாள் (23), பேச்சித்தாயின் தந்தை கோவிந்தசாமி (79) ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து முத்துராஜை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட  அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  விஜயகுமார் மூவரை கொலை செய்த  முத்துராஜிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.   இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆஜரானார்.

Tags : Teenkasi ,death ,court ,grandfather ,teenager , Teenkasi court convicts execution of teenager, mother and grandfather
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...