வேலூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு பகுதியில் 14 காட்டு யானைகள் கடந்த சில மாதங்களுக்கு முகாமிட்டிருந்தது. இவற்றை வனத்துறையினர் விரட்ட முயன்றபோது வழிதவறி வாணியம்பாடி வனத்துக்கு சென்றது. அப்போது, பல இடங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு காட்பாடி அருகே வனத்துக்குள் முகாமிட்டுள்ளன. இதையடுத்து, தமிழக, ஆந்திர வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் 20 பேர் யானைகளை தொடர்ந்து கண்காணித்து அவற்றை வனத் துக்குள் விரட் டும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.