×

பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகளுக்கு அரசு வேலை

கன்னியாகுமரி  : பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகள் ஆன்டிஸ் நிஜாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் மகள் ஆன்றீஸ் ரிநிஜாவிற்கு இளநிலை உதவியாளர் பணியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஜனவரி 8ம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதவியவர்கள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Tags : Terrorists ,SSI Wilson , Kanyakumari, SSI, Wilson, Government, Work, Daughter
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...