டெல்லி : டெல்லி கலவரம் தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹீர் உசைன் வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.தாஹீர் உசைன் வீட்டு மாடியில் கற்குவியலும் பெட்ரோல் குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஆய்வு நடைபெறுகிறது.டெல்லி உளவு பிரிவு அதிகாரி அங்கித் சர்மா கொலை தொடர்பாக தாஹீர் உசைன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது டெல்லி போலீஸ்.