சென்னை : குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். காத்தவராயனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் அறிக்கையில், திமுகவிற்கு அசைக்க முடியாத தூணாக குடியாத்தம் பகுதியில் விளங்கியவர். என்னுடன் பணியாற்றி வரும் கழக சட்டமன்ற உறுப்பினர்களில் நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது எனக்கு பேரிழப்பு, என்று தெரிவித்துள்ளார்.