×

ஒட்டன்சத்திரத்தில் மக்களை அச்சுறுத்திய பன்றிகள் பிடிப்பு: நகராட்சி நடவடிக்கை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 1 முதல் 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகரித்து குடியிருப்புகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஆணையாளர் தேவிகா ஆலோசனையின்பேரில், நேற்று சுகாதார ஆய்வாளர் வீரபாகு தலைமையிலான ஊழியர்கள் பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம் நகர் 3வது வார்டு நாகணம்பட்டி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சுற்றித்திரிந்த 23 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர். இப்பணியின் போது சுகாதார மேற்பார்வையாளர்கள் காமராஜ், வீரப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Oddanchatram, pigs, capture,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி