டெல்லி: டெல்லி கலவரம் குறித்து உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கலவரத்தை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி போலீஸ் சார்பாக பதில் அளிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டார். கலவர சூழ்நிலையை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அரசு வக்கீல் மேத்தா கூறியுள்ளார்.