டெல்லி : டெல்லி கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி மீது பாஜக ஆதாரங்களுடன் திருப்பி இருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வெடித்த கலவரத்திற்கு ஆம் ஆத்மி கட்சியே சேர்ந்த பிரமுகர்களும் அவரது ஆதரவார்களே காரணம் என்று பாஜக கூறியுள்ளது. மேலும் கலவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், பெட்ரோல் குண்டு உட்பட ஆயுதங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமான குடோனில் இருந்து தான் விநியோகிக்கப்பட்டதாக புகார் கூறி வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது. ஆனால் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியினர் பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா தான் கலவரத்திற்கு காரணம் என்று கூறி ஆதாரங்களுடன் வீடியோ வெளியிட்டு உள்ளனர்.கலவரம் நடந்த இடங்களில் போலீசாரே சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.இந்த நிலையில், பாஜக கட்சியின் குற்றச் சாட்டு எதிர்க்கட்சிகள் இடையே பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.