சென்னை: கே.பி.பி. சாமி உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காக இருந்தவர் கே.பி.பி.சாமி. உடல்நிலை குன்றிய நிலையிலும் திமுக கொள்கைப் பாடலை பாடினார் கே.பி.பி.சாமி; சிறந்த தொண்டரை இழந்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.