சேலம்: சேலத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. வின் ஸ்டார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து தங்களது பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தை புகார் அளித்தனர். வின் ஸ்டார் நிறுவனம் பொதுமக்களிடம் சுமார் 500 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.