சென்னை: வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை கட்டாயமாக அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி நேரத்தில் அடையாள அட்டை அணியாத ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்த துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.