×

அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 3ம் தேதி விடுமுறை

குமரி: அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யா வழி பக்தர்கள், அய்யா வைகுண்டர் அவதார தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அவதார தினவிழா வருகிற மார்ச் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. நேற்று நெல்லை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 3ம் தேதி விடுமுறை என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Tags : Holidays ,Kanyakumari District , Ayya Vaikundar festival, Kanyakumari, holiday
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!