×

குஜிலியம்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே விவசாய தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். கரூர் மாவட்டம் திருமலைராயபுரத்தை சேர்ந்தவர் ராஜா (37). விவசாயி. குஜிலியம்பாறையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் உள்ள இவ்வூரில் இவருக்கு சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. இங்கு சுமார் 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. தோட்டத்தில் தான் வளர்த்து வந்த பசு மாட்டை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது.

இதை கண்ட ராஜா, இதுகுறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் மருதை தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி கிணற்றில் கீழே இறங்கினர். பின்னர் பசு மாட்டில் கயிற்றை கட்டி மேலே தூக்கி பசு மாட்டை உயிருடன் மீட்டனர். குஜிலியம்பாறை அருகே திருமலைராயபுரத்தில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

Tags : Kujiliyambara Kujiliyambara , Kujiliyambara, Cow, Rescue
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு...