திருச்சி: விசிக தலைவர் திருமாவளவன், ஜோதிமணி, கவிஞர் சல்மா உள்ளிட்டோர் மீது திருச்சி புத்தாநத்தம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிப்.24 ல் புத்தாநத்தத்தில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. முன் அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டதாகவும் 3,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.