×

கல்லூரி மாடியில் இருந்து விழுந்த மாணவன் சாவு : ஆவடி அருகே சோகம்

ஆவடி: ஆவடி அருகே வெள்ளானூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரி மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். ஆவடி அடுத்த வெள்ளானூரில்  தனியார் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு  செங்குன்றம், ஆசிரியர் காலனி, நாகாத்தம்மன் கோயில் தெருவை சார்ந்த சுதர்சன் (20) என்பவர்  பி.சி.ஏ இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்து வலிப்பு நோய் இருந்துள்ளது. அதற்காக, அவர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இவர், கல்லூரிக்கு சக மாணவர்கள் உதவியுடன் சென்று வருவது வழக்கம்.இந்நிலையில் நேற்று காலை சுதர்சன், வீட்டிலிருந்து பேருந்து மூலம் கல்லூரிக்கு வந்தார். பின்னர், அவர் தனது வகுப்பு அறையான 2வது மாடிக்கு தனியாக படிக்கட்டில் ஏறிச்சென்றார். பின்னர், அங்கிருந்து கைப்பிடி சுவரை பிடித்தபடி நடந்து வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உள்ளார். இதில், சுதர்சன் மண்டை உடைந்தது. பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். இதனையடுத்து, அவரை உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சுதர்சன் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கல்லூரி மாடியில் வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்து மாணவன் பலியான சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : student ,Death ,Avadi ,tragedy , Death of a student who collapsed from the college floor: tragedy near Avadi
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...