×

ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட ராமகிருஷ்ணா நகர், மணலி விரைவு சாலையோரம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிலர்  கடைகள், வீடுகள் கட்டி ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மண்டல உதவி ஆணையர் பால் தங்கத்துரை தலைமையில் செயற்பொறியாளர் வேலுச்சாமி, உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் ஆகியோர் மாநகராட்சி ஊழியர்களுடன் ராமகிருஷ்ணா நகர் பகுதிக்கு வந்தனர். பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 5க்கும் மேற்பட்ட குடிசைகள் மற்றும் கடைகளை பொக்லைன் மூலம்  இடித்து அகற்றினர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் வியாபாரிகளின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Tags : Disposal, occupied huts
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...