×

சத்துணவில் வெங்காயம், பூண்டு நீக்கம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை: அமெரிக்க இஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமாக அக்ஷ்ய பாத்ரா சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த  திட்டத்தில் வெங்காயம், பூண்டு தவிர்த்த உணவு அளிக்கப்பட உள்ளதாகவும், இதனால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமானேர் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,removal , Demonstration , onion and garlic removal
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...