×

இரும்பு உருக்கு ஆலையில் கம்பி விழுந்து தொழிலாளி பலி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே சாத்தாங்காடு சடையங்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை உள்ளது. இங்கு பழைய இரும்புகளை உருக்கி கட்டிட கம்பிகளாக தயார் செய் யப்படுகிறது. இந்த நிலையில், நேற்று உருக்கிய பின் தயாரிக்கப்பட்ட கம்பிகளை பண்டல்களாக கட்டி அதை கிரேன் மூலம் தூக்கி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று கிரேனில் இருந்த சுமார் 500 கிலோ எடைகொண்ட கம்பி பண்டல் அறுந்து கீழே விழுந்தது. இதில், பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நீல்காந்த் சந்தாரா (35). என்பவர் உள்ளே சிக்கி, உடல் நசுங்கி இறந்தார். தகவலறிந்த சாத்தாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வேறு கிரேன் மூலம் கம்பி பண்டலை அகற்றி நீல்காந்த் சந்தாரா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக நிறுவன மேலாளர் பார்வதிநாதன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : plant ,Wire ,steel plant , Wire worker falls, iron steel plant
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...