×

கீழடியில் அகழாய்வு புகைப்பட கண்காட்சி

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. 5 நாட்கள் நடந்த அகழாய்வில் பானை ஓடுகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனிடையே அகழாய்வை காண வரும்  பார்வையாளர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக, தொல்லியல் துறையினர் 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை நேற்று முதல் கீழடியில் அமைத்துள்ளனர். தாழிப்பானை,  சூதுபவளம், அகழாய்வு பணி உள்ளிட்ட அனைத்தையும் புகைப்பட ஆவணமாக்கி கண்காட்சியாக வைத்துள்ளனர். பார்வையாளர்கள் இந்த புகைப்பட கண்காட்சியை கண்டு ரசிக்கின்றனர்.

Tags : excavation photo exhibition , Underground ,excavation, photo, exhibition
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...