சென்னை: இந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகளாக எதிருரை தாக்கல் செய்யப்படாததால் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்குகளை 3 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பான்மையான வழக்குகள் நிலுவையாகவே இருந்து வருவது ஏற்புடையதல்ல.
எனவே, அவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் நிலுவையாக உள்ள வழக்குகளில் எதிருரை தாக்கல் செய்யப்படாத நீதிப்பேராணை மற்றும் நீதிப்பேராணை மேல்முறையீட்டு வழக்கினங்கள் மற்றும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்ட வழக்குகளில் வரும் 31.12.2019ம் வரை காலத்திற்குண்டான நீதிமன்ற வழக்குகள் குறித்து மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.