தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக ரஜினிக்கு இன்று மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என ஒரு நபர் விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு வழக்கில் ரஜினியின் சாட்சியம் மிகவும் அவசியம். நேரில் ஆஜராக உத்தரவிட்டு ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் எனவும் கூறியுள்ளார்.